மிரட்டல், அவமதிப்பு, ஆபாச நடனத்திற்கு பாதுகாப்பு – உலகின் தலை சிறந்த காவல்துறைக்கு தொடரும் சோகம்..!

மிரட்டல், அவமதிப்பு, ஆபாச நடனத்திற்கு பாதுகாப்பு – உலகின் தலை சிறந்த காவல்துறைக்கு தொடரும் சோகம்..!

Share it if you like it

மிரட்டல், அவமதிப்பு, ஆபாச நடனத்திற்கு பாதுகாப்பு தமிழக காவல்துறைக்கு தொடரும் சோகம்.

இன்னும் 5 மாதம் தான் உள்ளது நாங்கள் பார்க்காத காவல்துறையா? என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிக்கு பகீர் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு பலர் தங்களது கடும் கண்டனத்தை உதயநிதிக்கு தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று அனைவராலும் அழைக்கப்படும் சவுக்கு சங்கர் 2 நாட்களுக்கு முன்பு ஒட்டு மொத்த காவல்துறையையே இழிவுப்படுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் தி.மு.க-வினர் ஏற்பாடு செய்து இருந்த ஆபாச நடனத்திற்கு பெண் காவலர்கள் பணியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை விடியல் ஆட்சியில் உருவாகி வருவதாக பலர் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில். ஆபாச நடனம் நடைபெறும் இடத்தில் பெண் காவலர்களை பணியில் ஈடுபடுத்தி இருப்பது மிகவும் மோசமான செயல் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த தமிழக காவல்துறை இன்று விடியல் ஆட்சியில் தொடர் சோதனைகளையும், வேதனைகளையும், சந்தித்து வருகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it