மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் சிலர் மது அருந்தும் காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது இந்நிலையில் பாப்பான்குளம் அருகே மதுகுடித்த தந்தையை திருத்த விஷம் குடித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் தமிழக மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று கூறிய தி.மு.க அரசு எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு மதுவிலக்கை உடனே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.