வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு, அனைத்திலும் விலை உயர்வு மட்டுமே – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு, அனைத்திலும் விலை உயர்வு மட்டுமே – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Share it if you like it

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் “என் மண் என் மக்கள்” நடைப்பயணத்தை மிக தீவிரமாக செயல்படுத்தி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். மேலும் இதுகுறித்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில்,பால் விலை 25 சதவீதம் உயர்வு, பால் பொருள்கள் விலை வரலாறு காணாத உயர்வு, ஆவின் நெய் விலை உயர்வு, மின்சார கட்டணம் 15 முதல் 50 சதவீதம் வரை உயர்வு, சொத்துவரி 50 சதவீத உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு. வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு, அனைத்திலும் விலை உயர்வு மட்டுமே.

இந்த மக்கள் விரோத திமுக கூட்டணிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்திலிருந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக 39 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமர் கரத்தை வலுப்படுத்துவோம். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் அந்த பதிவினை பகிர்ந்து வருகின்றனர்.

https://x.com/annamalai_k/status/1714502889404784827?s=20


Share it if you like it