திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, நாகா மக்களை ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது !

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, நாகா மக்களை ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது !

Share it if you like it

சமீபத்தில் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில்,அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், நாகா இனமக்கள் நாய்கறி உண்பவர்கள் அவர்களே இந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டியுள்ள நிலையில், உப்பிட்டு சோறு சாப்பிடும் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து யோசிக்கவேண்டும் எனப் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ‘ நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அவரின் கருத்து பலரால் ரீ-டிவீட் செய்யப்பட்டு வருகிறது.


Share it if you like it