எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்காதீங்க

எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்காதீங்க

Share it if you like it

நேற்று மாலை 6.30 மணியளவில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலரை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் வெளியிட நபர் ஒருவருக்கு 10ரூபாய் என்று வசூலித்து அதனை காண விஜய் ரசிகர்கள் பலர் முந்தியடித்துக்கொண்டு படம் பார்க்கும் இருக்கையின்மேல் ஏறி ஆட்டம் போட்டு இருக்கைகளை உடைத்துள்ளனர்.

இந்நிலையில் திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் அவர்கள் இதனை விமர்சித்து தனது சமூக வலைத்தளத்தில், படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்’ – 90s and 2K Boomers.

ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.. உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை.. பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க.

இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு.. கெட்டுப்போகாம.. ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!!

இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு.. வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல.. ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா?

எல்லாரும் சொல்லியும் மண்டைல ஏறலையா?

இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதனால் காண்டான விஜய் ரசிகர்கள் புளுசட்டை மாறனை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it