அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள மதன்பீட ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட திராவிட கழகத்தை சேர்ந்த பிரமுகர் பழனிசாமி என்பவர் மட்டும் தேசிய கீதத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே உட்கார்ந்திருந்தார்.ஏன் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழவில்லை என்பதற்கு நான் எதற்காக எழுந்திரிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.