கோபாலபுரத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்பது மக்களுக்குத் தெரியாதா? – அண்ணாமலை !

கோபாலபுரத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்பது மக்களுக்குத் தெரியாதா? – அண்ணாமலை !

Share it if you like it

இன்று திருப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் AP.முருகானந்தம் அவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த 33 மாத திமுக ஆட்சியில், தமிழகத்தின் கிராமப் பகுதிகள் வரை போதைப் பொருள்கள் புழக்கம் பரவியிருப்பதுதான் திமுகவின் சாதனை. போதைப் பொருள் விற்பவர்கள், திமுகவின் அத்தனை தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இதனை மடைமாற்ற, மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி கொடுக்கவில்லை என்று பொய் கூறிக் கொண்டிருக்கிறார்கள். சமையல் எரிவாயு மானியம், பிரதமரின் வீடு, குழாயில் குடிநீர், முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 கௌரவ நிதி என்று, மக்களுக்கு நேரடியாக நமது பிரதமர் வழங்கிக் கொண்டிருக்கிறார். கோபாலபுரத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்பது மக்களுக்குத் தெரியாதா?

பாராளுமன்ற மையக் கட்டிடத்தில் செங்கோல், திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது என, நமது தமிழ் மொழிக்கும், நமது கலாச்சாரத்துக்கும், இதுவரை யாரும் கொடுக்காத முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தான் வழங்கியுள்ளார். தொடர்ந்து, தமிழ் மொழியின் பெருமையை, செல்லுமிடமெல்லாம் போற்றுகிறார் நமது பிரதமர். மேலும், நமது பிரதமர் ஆட்சியில்தான், சாமானிய மக்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறது. எளிய மக்களைத் தேடி, உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், சாமானிய கிராமப்புற மக்கள் நாடு முழுவதும் அறியப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. ஆனால், கடந்த பத்து ஆண்டுகள் ஊழலற்ற நல்லாட்சியின் மூலம் தம்மை நிரூபித்திருக்கிறார் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். எனவே, வரும் ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலன்று, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, திருப்பூருக்குச் சேவை செய்யும் வாய்ப்பினை, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணன் திரு.AP.முருகானந்தம்
அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சாமானிய மக்களின் சின்னம், இளைஞர்களின் சின்னம், தாய்மார்களின் சின்னம், வளர்ச்சியின் சின்னம், அடுத்த தலைமுறையின் சின்னம், நமது பாரதப் பிரதமரின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. ஆனால், கடந்த பத்து ஆண்டுகள் ஊழலற்ற நல்லாட்சியின் மூலம் தம்மை நிரூபித்திருக்கிறார் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். எனவே, வரும் ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலன்று, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, திருப்பூருக்குச் சேவை செய்யும் வாய்ப்பினை, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணன் திரு.AP.முருகானந்தம்
அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சாமானிய மக்களின் சின்னம், இளைஞர்களின் சின்னம், தாய்மார்களின் சின்னம், வளர்ச்சியின் சின்னம், அடுத்த தலைமுறையின் சின்னம், நமது பாரதப் பிரதமரின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *