தி.க.ன்னு சொல்ற எல்லாரும் ஃபிராடு பயலுகதான்: வீரமணி, சத்யராஜை வெளுத்த ஏர்போர்ட் மூர்த்தி!

தி.க.ன்னு சொல்ற எல்லாரும் ஃபிராடு பயலுகதான்: வீரமணி, சத்யராஜை வெளுத்த ஏர்போர்ட் மூர்த்தி!

Share it if you like it

தி.க.ன்னு சொல்ற எல்லாரும் ஃபிராடு பயலுகதான். கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் கதையை சொல்லி வெளுத்தெடுத்திருக்கிறார் ஏர்போர்ட் மூர்த்தி.

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகிகயாக இருந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. பின்னர், திருமாவளவனின் போலி அரசியல் பிடிக்காததால் புரட்சித் தமிழகம் என்கிற பெயரில் புதிய கட்சியை நிறுவி தலைவராக இருந்து வருகிறார். இந்த ஏர்போர்ட் மூர்த்திதான் தி.க. என்று சொல்லும் எல்லோரும் ஃபிராடு பயல்கள்தான் என்று அதிரடி காட்டி இருக்கிறார். இதற்கு உதாரணமாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வீட்டில் நடந்த சம்பவம் பற்றியும், நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்த சம்பவம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி வெளுத்து எடுத்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் ஏர்போர்ட் மூர்த்தி கூறுகையில், “திராவிடர் கழகத் தலைவர் இருக்காருல்ல கி.வீரமணி, திருட்டு வீரமணி, அவரது பையன் ஜாதி மாறி ஒரு மலையாளப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன்தான் நடத்தி வைத்தார். அந்தப் பையனை வீரமணி எத்தனை நாள் வீட்டில் சேர்க்காமல் இருந்தார் தெரியுமா? அவன் அங்கயும் இங்கயும் ரோட்டுல பிச்சைக்காரன் மாதிரி சோத்தை வாங்கித் தின்னுகிட்டு, யாராவது ஏதாவது கொடுத்தால் அதை வாங்கித் தின்னுகிட்டு, ஒட்டுத் திண்ணையில் இருந்தார். தனது சொந்த சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்காக வீரமணி இவ்வாறு நடந்துகொண்டார்.

வீரமணி மட்டுமல்ல, தி.க.ன்னு சொல்ற எல்லோருமே ஃபிராடு பயலுகதான். இந்த நடிகர் சத்யராஜ்னு ஒருத்தர் இருக்காருல்ல… பெரிய …டுங்கி மாதிரி புரட்சி எல்லாம் பேசுவாரு… அவரு மகனுக்கு எப்புடி கல்யாணம் பண்ணி வச்சாருங்கிற கதை தெரியுமா? எதுக்கெடுத்தாலும் கருப்புச்சட்டை, எத புடிச்சாலும் கருப்பாவே புடிக்கிற மாதிரியே பேசுவாரு. அவரு மகனுக்கு திருமணம் நடத்துனாரு, எப்புடி நடத்துனாரு? ஹிந்து சம்பிரதாயப்படி நடத்தினாரு. ஏன்னு கேட்டா, அது எங்க வீட்ல சம்பிரதாயப்படி நடத்தச் சொல்லிட்டாங்கன்னு சொல்றாரு. அப்புறம் என்ன …த்துக்குடா வெளில வந்து புரட்சி எல்லா பேசுற. உன் வீட்ல பேசு. சாமி இல்ல, கடவுள் இல்ல, நா பூனையை குறுக்க விடுவேன்னு பேசுற. இதை உன் மகன் கல்யாணத்துல நடத்திக் காட்டி இருக்க வேண்டியதுதானே?

அப்ப இது யாரை ஏமாத்துற வேலை… கேட்டா, நான் அந்தக் கொள்கையில இருக்கிறேன். ஆனா, என் வீட்ல வந்து வேற கொள்கையில இருக்காங்க. ஏன்டா, அப்ப மக்கள் வேற கொள்கையில இருக்கான். எதுக்கு உன் கொள்கையை எடுத்தாந்து அங்க திணிக்கிற. எதுக்கு கடவுள் இல்லேங்கிற. இருக்குதோ இல்லையோ அது ரெண்டாவது பட்சம். எதுக்கு நீ இல்லங்கிற. ஒருத்தனோட நம்பிக்கையை, கடவுள் இருக்குதுன்னு நினைக்கிறவனை, அவனது எண்ணத்தை நீ ஏன் கொச்சைப்படுத்துற. இதுதான் திராவிடர் கழகத்தினரின் இரட்டை வேடம். இது இப்போது அம்பலப்பட்டு விட்டது. வெளியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்” என்று போட்டு பொளந்து கட்டி இருக்கிறார் ஏர்போர்ட் மூர்த்தி.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் மற்றும் திராவிடர் கழத்தினரின் வெளி வேஷத்தை எள்ளி நகையாடி வருகின்றனர்.


Share it if you like it