இன்னோவா கிரிஸ்டா, கோவை, ராமநாதபுரத்தில் வீடு எப்படி வந்தது? – சாட்டை துரைமுருகன் கேள்வி!

இன்னோவா கிரிஸ்டா, கோவை, ராமநாதபுரத்தில் வீடு எப்படி வந்தது? – சாட்டை துரைமுருகன் கேள்வி!

Share it if you like it

தி.மு.க. மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியின் உண்மையான சுயரூபத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தோலுரித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். இவர், டாட்ஸ் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

ஆட்டை விற்பது போல தன்னை விற்பனை செய்து கொண்டவர் ராஜீவ் காந்தி. கொள்கையில் முரண், கட்சியில் முரண், என்றால் தனி கட்சி துவங்கி இருக்க வேண்டியது தானே. தனக்கு, தனி செல்வாக்கு இருக்கு என்று கருதுபவர் ஏன்? தனி கட்சி தொடங்கவில்லை. தி.மு.க.வை நேரடியாக எதிர்த்தவர், கருணாநிதியை தமிழ் இன துரோகி என்று கூறியவர். இன்று, தி.மு.க.வில் சேர்ந்து இருக்கிறார் என்றால் என்ன? காரணம் வெறும் பணத்திற்காக மட்டும்தான். வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக அவர் தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கிறார். கட்சியில் சேர்ந்த உடனே இன்னோவா கிரிஸ்டா காரில் எப்படி போகிறார்?

கோர்ட்டுக்கே போகாத வழக்கறிஞர். புளிய மரத்துக்கு அடியில் நின்று கொண்டு பேசும் வழக்கறிஞர்தான் ராஜீவ் காந்தி. இன்னோவா கிரிஸ்டா கார் வாங்க அவருக்கு எப்படி? பணம் வந்தது. ராமநாதபுரத்தில் வீடு கட்டி கொண்டு இருக்கிறார். கோவையில் வீடு கட்டி கொண்டு இருக்கிறார். அண்ணா சாலை அருகே மிகப்பெரிய வழக்கறிஞர் அலுவலகம் என அடுக்கடுக்காக ராஜீவ் காந்தி மீது குற்றச்சாட்டுகளை துரைமுருகன் அடுக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே

கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it