ஈ.வெ.ரா-விற்கு 100 கோடியில் சிலை அமைக்க உள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் 100 கோடியில் சிலை அவசியமா? என்று பொதுமக்கள் உட்பட பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு ஈ.வெ.ரா-விற்கு சிலை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.
- தமிழ் காட்டு மிராண்டி மொழி,
- திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்,
- ஆணை போல் முடி வெட்டிக்கோ, டிரெஸ் போட்டுக்கோ, ஆண் பெயரை வை, ஆணை போல் வளர், பெண்ணிற்கு கற்பு எதற்கு என்று சொன்ன ஈ.வெ.ரா-விற்கு சிலையா ? என்று நெட்டிசன்கள் தங்களின் கோவத்தை வெளிப்படுத்தி வரும் இவ்வேளையில். ஈ.வெ.ரா சிலை குறித்தும் அதன் கீழ் இருக்க வேண்டிய வாசகங்கள் குறித்தும் மறைந்த பிரபல எழுத்தாளர் சோ அவர்கள் நகைச்சுவையாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.