பிரேசிலில் சர்வதேச உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெறுகிறது. இதில் பாரதத்தின் சார்பில் பங்கேற்ற இளவேனில் வாலறிவன் பாரதத்திற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தவர். பாரதத்தின் முதல் பதக்கத்தை தங்கப் பதக்கமாக வென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மூலம் பாரதம் தனது பதக்க பட்டியலை தொடங்கியுள்ளது. முன்னதாக சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க இருக்கும் இவருக்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஐபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.