மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு தீர்வு; பிரிட்டன் பார்லிமென்டில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு தீர்வு; பிரிட்டன் பார்லிமென்டில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Share it if you like it

பாரத பிரதமர் மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்று பிரிட்டன் பார்லிமென்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து பார்லிமென்டில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசிகையில், “1987-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதன் பிறகு ஏற்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. 2009-ம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. இதற்கு முக்கியப் பொறுப்பு அன்றைய காங்கிரஸ் அரசுதான். தனது கடமைகளில் இருந்தும், இலங்கை போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு.

2014-ம் ஆண்டுக்குப் பிறகே, பிரதமர் மோடி இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார். இலங்கையின் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடி மனமார உணர்ந்திருந்தார். கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம். இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்து அமைத்துக் கொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு. காரைக்கால் – காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

ஹிந்து சமயத்தை பின்பற்றும் மக்கள்தொகை மிகவும் அபாயகரமான விகிதத்தில் குறைந்து கொண்டே வருகிறது. மத்திய மலையக பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை புதிய கவர்னராக நியமித்துள்ளனர். இவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்று பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின்போது வலியுறுத்தினார். தமிழக பா.ஜ.க. சார்பிலும், இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இலங்கை, உலக நாடுகளின் அதிகாரப் போட்டியில் பலியாகி விடக்கூடாது என்பதில் பிரதமர் மிகவும் கவனமாக இருக்கிறார்” என்றார்.


Share it if you like it