ஆவின் பொருட்கள் விலையை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெர்வித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆவின் பொருட்கள் விலை ஏற்றம் மறைமுக தனியார் நிறுவனங்களுக்கு துணை போகும் நடிவடிக்கை என்ற சந்தேசம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தெரித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்களில் ஆவின் பொருட்கள் விலை 8 – முறை உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.