என்ன சாரதா… நேற்றை விட இன்று அழகா இருக்க: வெற்றிக் களிப்பில் ஜொள்ளு விட்ட இளங்கோவன்!

என்ன சாரதா… நேற்றை விட இன்று அழகா இருக்க: வெற்றிக் களிப்பில் ஜொள்ளு விட்ட இளங்கோவன்!

Share it if you like it

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன், சால்வை போர்த்த வந்த சேலம் மாநாகராட்சி துணை மேயரை பார்த்து, என்ன சாரதா நேற்றை விட இன்றைக்கு அழகாய் இருக்கிறாய் என்று ஜொள்ளு விட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.

ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள மதசார்பற்ற கூட்டணியின் தேர்தல் பணிமனையில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணியினரின் வாழ்த்துக்களை பெற்றார் ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன். அப்போது, அவருக்கு சால்வை அணிவிக்க வந்த அனைத்து நிர்வாகிகளிடமும், கையில் சால்வையை வாங்கிக் கொண்டார் இளங்கோவன். ஆனால், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா கொண்டு வந்த சால்வையை மட்டும் தனது தோளில் போர்த்த வைத்து ஏற்றுக்கொண்டார் இளங்கோவன். அதுமட்டுமா, சால்வை அணிவித்த சாரதாவை பார்த்து அத்தனை பேர் மத்தியிலும், என்ன சாரதா, வர வர கலரும் அழுகும் அள்ளுது. நேற்றைக்கு விட இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கிறாய் என்று சொல்ல, துணை மேயர் சாரதா வெட்கத்தில் நாண, அடடடடா…

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…


Share it if you like it