வீட்டுல எலி… வெளியில புலி… இளங்கோவனின் டபுள் ஆக்ட்!

வீட்டுல எலி… வெளியில புலி… இளங்கோவனின் டபுள் ஆக்ட்!

Share it if you like it

நடிகர் எஸ்.வி.சேகர் நடித்த வீட்டுல எலி வெளியில புலி திரைப்படத்தைப் போல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் நடவடிக்கை இருந்ததாக கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்கிற பதட்டத்தில் இருந்த இளங்கோவன், தனது வீட்டில் பயபக்தியுடன் விபூதி பூசி சுவாமியை வேண்டிக் கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வீட்டிலிருந்து கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டவர், வெளியே வரும்போது நெற்றியில் இருந்த விபூதியை அழித்துக் கொண்டே வந்து காரில் ஏறினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், வீட்டில் இருந்தவரை விபூதி வைத்துக் கொண்டு இருந்தவர், வெளியே கிளம்பியதும் பெரியார் பேரன் என்கிற நினைப்பில் வீராவேசமாக விபூதியை அழித்து விட்டுச் செல்கிறார். இதுதான் வீட்ல எலி, வெளியில புலி என்பது என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இளங்கோவன் விபூதியை அழித்துவிட்டுச் செல்லும் வீடியோ இதோ…


Share it if you like it