மன்னாதி மன்னனாக இருந்தாலும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்று பேசிய திருமா : கோவில் கருவறைக்குள் சென்று ஸ்ரீ ராமருக்கு தீபாராதனை காட்டிய மோடி !

மன்னாதி மன்னனாக இருந்தாலும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்று பேசிய திருமா : கோவில் கருவறைக்குள் சென்று ஸ்ரீ ராமருக்கு தீபாராதனை காட்டிய மோடி !

Share it if you like it

ஜனவரி 22 அயோத்தியில் ஸ்ரீ பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மிக பிரம்மாண்ட முறையில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், பேச்சாளர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் ஜி பகவத் ஆகிய இருவரும் கோவில் கருவறைக்குள் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தீப ஆராதனை செய்தனர்.

சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ எனும் மாநாடு ஜன.26 ல் திருச்சி அடுத்த சிறுகனூர் பகுதியில் நடைப்பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட இந்தியா (INDIA) கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தற்போது நடந்த மாநாட்டில் பேசிய திருமாவளவனின் காணொளியையும் முந்தைய ஆண்டு நடந்த மாநாட்டில் பேசிய திருமாவளவனின் காணொளியையும் இணைத்து அவர் மாற்றி மாற்றி பேசியதை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.

2023ல் நடந்த மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது :

பெரியாரின் நெஞ்சில் துளைத்த முள் கருவறையில் நுழைவு. மன்னாதி மன்னனாக இருந்தாலும், மாபெரும் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவர்கள் கட்டிய கோவிலின் கருவறைக்குள் அவர்களே நுழைய முடியாது. அவர்கள் கருவறையின் வெளியில் தான் நிற்க வேண்டும். இது இந்த சமூகத்தின் நீண்ட நெடிய சாப கேடு. கோட்டைக்குள்ளே நுழைந்துவிட முடியும். கோபுரத்தின் உச்சியில் ஏறிவிட முடியும், இமயத்தின் சிகரத்தையும் தொட்டு விட முடியும். ஆனால் கோவிலின் கருவறைக்குள் நுழைய முடியாது.

2024ல் நடந்த மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது :

உண்மையில் உனக்கு (மோடிக்கு) கடவுள் பக்தி இருந்திருந்தால் சிறப்பு விருந்தினராக மட்டும்தான் நீ சென்றிருக்க வேண்டும். அங்கு சங்கராச்சாரியாரோ அல்லது வேறு யாரோ ஒரு மடாதிபதியோ சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும். மோடி எந்த சங்கராந்தியத்திற்கு மடாதிபதி. வெறும் அரசியல்.

மன்னாதி மன்னனாக இருந்தாலும் கோவில் கருவறையில் நுழைய முடியாது என்று திருமாவளவன் பேசிய நிலையில், இன்று பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்டமாக பிராண பிரதிஷ்டை செய்து கோவில் கருவறைக்குள் ஸ்ரீ ராமரின் பக்கத்தில் நின்று தீபாராதனை காட்டி அதை நேரடியில் ஒளிபரப்பும் செய்து திருமாவளவன் பேசிய கருத்துக்களுக்கு பதிலடியாக நிகழ்ந்துள்ளது.

https://x.com/ThiruttuRaiyil/status/1751917397689455087?s=20


Share it if you like it