விஜயதசமி மற்றும் தேசிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அனுமதி அளிக்க மறுத்த நீலகிரி,கோவை.திருப்பூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 பகுதிகளில் உள்ள காவல்துறை ஆய்வாளர் முதல் டி.ஜி.பி ஆகியோர்மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர்ந்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.