தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமாக இருப்பவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர், தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து பேசிய காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை எப்படி? ஏமாற்றினார். எங்க அப்பாவை எப்படி? ஏமாற்றினார். எம்.ஜி.ஆர். எப்படி? ஏமாற்றினார். எஸ்.எஸ். ராஜேந்திரனை எப்படி? ஏமாற்றினார் என்பது குறித்து ஒரு புத்தகத்தை எழுதலாம் என கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.