ஈ.வெ.ரா.வுக்கு ரூ.125 கோடி சொத்து வந்தது எப்படி? புட்டுப்புட்டு வைக்கும் ஏர்போர்ட் மூர்த்தி… மரண பங்கம்!

ஈ.வெ.ரா.வுக்கு ரூ.125 கோடி சொத்து வந்தது எப்படி? புட்டுப்புட்டு வைக்கும் ஏர்போர்ட் மூர்த்தி… மரண பங்கம்!

Share it if you like it

ஈ.வெ.ரா. என்று அழைக்கப்படும் ஈரோடு வெங்கட ராமசாமிக்கு 125 கோடி ரூபாய்க்கு சொத்து வந்த எப்படி தெரியுமா? என்பது பற்றி ஏர்போர்ட் மூர்த்தி புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.

புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவராக இருப்பவர் ஏர்போர்ட் மூர்த்தி. பிரபல அரசியல் பிரமுகரான இவர், தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத் தலைவர்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி வருகிறார். இவரது கருத்துக்கள் அனைத்துமே ஏற்புடையதாகவே இருக்கின்றன. மேலும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கின்றன. ஏற்கெனவே, வீரமணி மகன் திருமணத்தில் என்ன நடந்தது, சத்தியராஜ் மகன் சிபிராஜ் திருமணம் எப்படி நடந்தது என்பன உட்பட பல்வேறு தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர். இவர்தான் தற்போது ஈ.வெ.ரா.வுக்கு 125 கோடி ரூபாய் சொத்து வந்தது எப்படி என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஏர்போர்ட் மூர்த்தி அளித்த பேட்டியில், “ஈ.வெ.ரா. பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர் என்பது போல திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் சித்தரித்து வருகிறார்கள். அதாவது, ஈ.வெ.ரா. இரண்டு மூன்று தலைமுறைகளாக பெரிய கோடீஸ்வரர்கள். தனது தென்னந்தோப்பை விற்று ஏழைகளுக்கு, பட்டியல் சமூகத்தினருக்கும் கொடுத்தார் என்று கதையளந்து விடுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தனது தந்தை வண்டி மாடு வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.

எனது குடும்பம் வறுமையில் வாடியதால் என்னை எனது பெரியம்மாவிடம் தத்துக் கொடுத்தார்கள். அவர் கணவனை இழந்த விதவை. அவரும் வறுமையில்தான் வாழ்ந்து வந்தார். இதனிடையே, மாட்டு வண்டி ஓட்டியதில் கிடைத்த வருமானத்தை வைத்து எனது தந்தை ஒரு மண்டிக்கடை வைத்தார். இதனால், என்னை மீண்டும் எனது பெற்றோர்களை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர், நான் மண்டிக்கடையை கவனித்து வந்தேன். இதில் கிடைத்த வருமானம் போதவில்லை என்பதால், எனது நண்பர்களுடன் சென்று காவிரிக் கரையோரம் சென்று வேறு ‘தொழில்’ செய்தேன் என்று ஈ.வெ.ரா.வே கூறியிருக்கிறார்.

மேலும், தற்போது திராவிடர் கழகத்துக்கு 1,000 கோடிக்கு மேலான சொத்துக்கள் இருக்கிறது. ஈ.வெ.ரா. இருக்கும்போதே 125 கோடி ரூபாய் இருந்தது. ஆரம்பத்தில் ஈ.வெ.ரா. மார்வாடிகளை எதிர்த்தார். நாலைந்து கடைகளுக்கு முன்பு போராடினார்கள். அப்போது, சுமார் 500 பேர் கைதாகி சிறைக்குச் சென்றார்கள். பின்னர், மார்வாடிகள் வைத்திருக்கும் வடநாட்டு நிறுவனங்களை மிரட்டி பணம் வாங்கியவர்தான் ஈ.வெ.ரா. இதேபோல பலரையும் மிரட்டி சிறிது சிறிதாக பணத்தை சம்பாரித்தார். இப்படித்தான் 125 கோடி ரூபாய் வந்தது. இதுதான் உண்மை. சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் ஈ.வெ.ரா.

கீழே கிடந்த கடலை, மிக்சர் ஆகியவற்றை பொறுக்கித் தின்றிருக்கிறேன் என்று ஈ.வெ.ரா.வே கூறியிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் தமிழர் தலைவர் என்கிற புத்தகத்தில் இருக்கிறது. ஈ.வெ.ரா. பெற்றெடுத்த நச்சுப் பாம்புதான் அண்ணாதுரை. அவர் பெற்றெடுத்த நச்சுப் பாம்புகள் இன்றைய தி.மு.க.வினர்” என்று வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஈ.வெ.ரா.வின் நினைவு நாளான இன்று இக்காணொளி வைரலாகி வருவது, திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it