அயோத்தியில் ராமர் கோவில் அமைய தமிழகத்திலிருந்து குடும்பம் குடும்பமாக நிதி வழங்குதல்

அயோத்தியில் ராமர் கோவில் அமைய தமிழகத்திலிருந்து குடும்பம் குடும்பமாக நிதி வழங்குதல்

Share it if you like it

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் இருந்து நிதி சேகரிக்கும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர டிரஸ்ட் துவங்கியுள்ளது.

அதையடுத்து மக்கள் பலரும் ஆர்வத்துடன் அவர்களால் முடிந்த நிதியை ஆலயம் அமைவதற்கு அளித்து வருகின்றார்கள்.

சாதாரண மக்கள் துவங்கி, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி கூட்டுக்குடும்பமாக இருக்கும் பழக்கம் கொண்ட குடும்பங்கள் அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் நிதி அளித்து வருகிறார்கள்.

தென்தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் துணை தலைவராக இருந்து சமூகப் பணி ஆற்றி வந்த திரு. பூ.மு. ராமகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் உடல் நிலை குறைவு காரணமாக உயிர் இழந்தார்.‌ இன்று அவரது குடும்ப உறவினர்கள் சார்பாக அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைக்க ரூ. 1,11,111/- நிதியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திரத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகளிடம் சமர்ப்பித்தனர்.


Share it if you like it

One thought on “அயோத்தியில் ராமர் கோவில் அமைய தமிழகத்திலிருந்து குடும்பம் குடும்பமாக நிதி வழங்குதல்

  1. He is the realtime Prime minister’.He is a model P.M He is What and how a PM to be of India.Indians are Proud of Him.

Comments are closed.