அ.தி.மு.க-விற்கு பா.ஜ.க அவசியம்; அந்த நிலையை உருவாக்கிவிட்டார்கள் – பிரபல அரசியல் விமர்சகர் கருத்து!

அ.தி.மு.க-விற்கு பா.ஜ.க அவசியம்; அந்த நிலையை உருவாக்கிவிட்டார்கள் – பிரபல அரசியல் விமர்சகர் கருத்து!

Share it if you like it

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்றால் பா.ஜ.க-வின் துணை அவசியம் என பிரபல அரசியல் விமர்சகர் ரவிந்திரன் துரைசாமி பிரபல இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க-வின் மீது பெரும் ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சிக்கு அதிக உறுப்பினர்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியை மட்டுமில்லாது, எதிர்கட்சியினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது பா.ஜ.க. தி.மு.க-வின் ஊடக பலம், பணபலம், அதிகார பலம் என அனைத்தையும் கடந்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்னும் அந்தஸ்தை அக்கட்சி பெற்றுள்ளது .

இந்த நிலையில் தான், தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்றால் பா.ஜ.க-வின் துணை அவசியம் என பிரபல அரசியல் விமர்சகர் ரவிந்திரன் துரைசாமி பிரபல இணையதள ஊடகமான ஆதன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதன் லிங்க் இதோ.


Share it if you like it