கோவில் பூசாரிகள் முகத்தில் பக்திக்கு மாறாக பயம் – ஆளுநர் ஆர்.என் ரவி !

கோவில் பூசாரிகள் முகத்தில் பக்திக்கு மாறாக பயம் – ஆளுநர் ஆர்.என் ரவி !

Share it if you like it

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது :-

“இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது.” – ஆளுநர் ரவி


Share it if you like it