சத்தீஸ்கர் மற்றும்  மிசோரத்தில் நாளை முதல்கட்ட  வாக்குப்பதிவு !

சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு !

Share it if you like it

மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் சட்டபேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (07-11-2023) நடைபெற உள்ளது. மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபையில் 20 இடங்களுக்கும் முதல் கட்டமாக நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும்.

மிசோரம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 17 டிசம்பர் 2023 அன்று முடிவடைகிறது, அதே சமயம் சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 3 ஜனவரி 2024 அன்று முடிவடைகிறது.


Share it if you like it