நெஞ்சை பதை பதைக்க வைத்த  காட்சி: சொன்னா கேக்கறாங்களா!

நெஞ்சை பதை பதைக்க வைத்த காட்சி: சொன்னா கேக்கறாங்களா!

Share it if you like it

மும்பை மெட்ரோ ரயிலில் புட்போர்டு அடித்த இளைஞர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்த காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

இளம் கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ரயிலில் புட்போர்டு செய்வதை பெருமையாக கருதி கொண்டு இருக்கின்றனர். அதில், எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

ரயிலில் புட்போர்டு செய்து அகால மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களை ரயில்வே நிர்வாகம் ஆங்காங்கே காட்சிப்படுத்தி இருக்கிறது. இதுதவிர, ஒலிபெருக்கிகள் வாயிலாக தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதுபற்றி துளியும் கவலைப்படாமல் இளைஞர்கள் புட்போர்டு செய்து வரும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், மும்மை மெட்ரோ ரயிலில் புட்போர்ட் அடித்த இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்த காணொளியை ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தற்பொழுது, இக்காணொளி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it