திமுகவுக்கு, இறுதிக் காலம் நெருங்கி விட்டது, திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் – அண்ணாமலை !

திமுகவுக்கு, இறுதிக் காலம் நெருங்கி விட்டது, திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் – அண்ணாமலை !

Share it if you like it

சமீபத்தில் கொடிக்கம்பம் விவகாரத்தில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டார். இதைதொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் கொடிக்கம்பம் வைக்கப்போவதாக பாஜக அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழக பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜக பின்வாங்கப் போவதில்லை.

1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it