சமூக வலைதளத்தில் செந்தில் கண்ணன் என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று தான் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றேன். கோவிலுக்கு வேஷ்டி அனிந்துதான் போகவேண்டும் என்ற கட்டளைகள் இருப்பதால், கோவிலுக்கு வெளியே சென்று புது வேஷ்டி ஒன்று வாங்க சென்றேன். அப்போது தமிழ்நாடு அரசு முத்திரையுடன் பொங்கல் இலவச வேஷ்டி ரூபாய் 50க்கு விற்று கொண்டிருந்தனர். இந்த இலவச வேஷ்டியை அந்த கடையில் விற்ற தமிழகத்தை சேர்ந்தவன் யார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து நியாய விலை கடை மூலமாக போனதா ? இல்லை யாராவது கட்சிக்காரர்கள் விற்றார்களா என்று தெரியவில்லை ? இந்த வேஷ்டியில் கோடு நம்பர் உள்ளது. இப்படி களவு செய்து விற்பதற்கு நீங்கெல்லாம் …? இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.