தோழர்களை கழுவி ஊற்றிய பிரான்ஸ் பெண்!

தோழர்களை கழுவி ஊற்றிய பிரான்ஸ் பெண்!

Share it if you like it

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, சுப.வீ, சுந்தரவள்ளி மற்றும் பனிமலர் மீது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில வைரலாகி வருகிறது.

சமூக நீதி, சுயமரியாதை, பெண் விடுதலை, என ஊர் முழுவதும், பேசி வரக்கூடியவர்கள் ஈ.வெ.ரா-வை தலைவராக ஏற்றுக் கொண்ட தோழர்கள். ஆனால், அவர்களின் உண்மையான சுயரூபம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் புதிய இயக்கத்தை உருவாக்கியவர் கொளத்தூர் மணி. இவர், மீது தான் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அந்த வகையில், நிர்வாணப் படங்களை காட்டி பணம் பறிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கொளத்தூர் மணி செயல்படுகிறார். என் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பெரியார் சரவணனிடம் உள்ளது, என்று பகீர் தகவலை பிரபல யூ டியூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது தான், பெரியாரிஸ்ட்களின் உண்மையான, சுயரூபம் என்று நெட்டிசன்கள் அப்பொழுது கிண்டல் செய்து இருந்தனர். இந்த நிலையில் தான், சுந்தவரள்ளி, பனிமலர், சுப.வீ உள்ளிட்டவர்களின் போலி முகத்திரை மற்றும் அவர்களின் செய்த அசிங்கங்கள் குறித்து இணையதள ஊடகமான ஆதனிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இக்காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.


Share it if you like it