திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்ட நான்கு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ் பேட்டையில் உள்ள மணிகண்டன், சுமித்தரா தம்பதியரின் 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் சிசிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்த வமனைக்கு மேல் சிகிச்கைக்காக மாற்றப்பட்டார். மற்ற இரண்டு பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இந்த நிலையில் சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.