திராவிட மாடல் பஸ்: குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?!

திராவிட மாடல் பஸ்: குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?!

Share it if you like it

அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகிய சம்பவத்தால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் பஸ்ஸில் ஒழுகிய மழை நீரால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பின்னலூர் பேட்டையை நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்த ஓட்டையால் வெளியே பெய்த மழை நீர் பேருந்திற்குள் ஒழுகியுள்ளது. அந்தவகையில், பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். இதனை, பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இக்காணொளி தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.

இதுதான், திராவிட மாடல் பஸ் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்தான, செய்தியினை பாலிமர் வெளியிட்டுள்ளது.


Share it if you like it