பயணியை செருப்பால் அடித்த கண்டக்டர்!

பயணியை செருப்பால் அடித்த கண்டக்டர்!

Share it if you like it

மதுபோதையில் இருந்த பயணியை பஸ் கண்டக்டர் செருப்பால் அடித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஸ் கண்டக்டர்கள் சிலர் பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்துக் கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு காணொளிகளை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும். இப்படிப்பட்ட சூழலில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

அதாவது, பயணி ஒருவர் தனது ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்து இருக்கிறார். அந்த வகையில், அவர் எதிர்பார்த்த பஸ் வந்த உடன் அதில் ஏற முயன்று இருக்கிறார். எனினும், அவர் மது போதையில் இருந்த காரணத்தினால், பஸ் கண்டக்டர் அந்த பயணியை பஸ்ஸில் ஏற அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த பஸ் கண்டக்டர் தனது செருப்பை கழட்டி அந்த பயணியை அடித்து இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it