அரசு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு !

அரசு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு !

Share it if you like it

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மேலமங்களம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் மாரிமுத்து. இவர் அருகே உள்ள பெருங்காடு அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர் மாரிமுத்து, அங்கு நடந்த குழந்தைகள் தின விழாவிலும் கலந்துகொண்டுள்ளார். மாலை பள்ளிகூடம் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக வகுப்பில் இருந்து புத்தகப்பையை எடுத்துக் கொண்டு வரும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடன்வந்த சக மாணவர் எழுப்பியும் எழுந்துகொள்ளாத நிலையில் உடன் வந்த மாணவர் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து மாணவரின் உறவினர்கள், உடன்படித்த சக மாணவர்கள் மருத்துவமனை முன் கூடினர். இந்த சூழலில் மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவரின் பெற்றொர் காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டுக் காண்பித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


Share it if you like it