சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி P. ஜாஸ்மின் அவரது தந்தை பெரியஇருசன் நெசவுத் தொழில் செய்பவர். மாணவியின் பயிற்றுனர் G.பொன்சடையன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தற்போது மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கம் வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை பாராட்டி குடியரசு தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சி தலைவர், சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவி ஆசிய அளவிலான வழு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நம் பாரத நாட்டிற்க்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.