பேன்ட் ஜிப்பை கழற்றி பெண்ணிடம் ஆரிஃப் ஆபாசம்… பேன்ட்டிலேயே 4 முறை ‘மூச்சா’ போக வைக்க போலீஸ்!

பேன்ட் ஜிப்பை கழற்றி பெண்ணிடம் ஆரிஃப் ஆபாசம்… பேன்ட்டிலேயே 4 முறை ‘மூச்சா’ போக வைக்க போலீஸ்!

Share it if you like it

குஜராத்தில் பெண்ணிடம் பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாசமாகப் பேசிய ஆட்டோ டிரைவர் ஆரிஃபை, போலீஸார் கைது செய்து 4 முறை பேன்ட்டிலேயே மூச்சா போக வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வாபி நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த இந்நகரின் கீதா நகரிலுள்ள ரயில் நிலையம் அருகே பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான ஆரிஃப் முகமது அபுசாத் சையத் என்பவர், தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி இருக்கிறார். இப்படி ஆட்களை ஏற்றுவதில் போட்டா போட்டி ஏற்படவே, ஆத்திரமடைந்த ஆரிஃப், அந்த பெண் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதையடுத்து, ஆரிஃப் பேசுவதை அப்பெண் ஆட்டோ டிரைவர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆரிஃப், தனது பேன்ட் ஜிப்பை கழற்றி, இந்தா இதையும் வீடியோ எடுத்துக்கோ, போலீஸுக்கு வேண்டுமானாலும் போ, என்னை போலீஸ் ஒண்ணும் புடுங்க முடியாது என்று கூறியதோடு, ஆபாசமாகவும் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஏற்றி பயணிகளை அவரவர் இருப்பிடத்தில் இறக்கி விட்ட அப்பெண் ஆட்டோ டிரைவர், மேற்கண்ட வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேனுக்குச் சென்று புகார் கொடுத்தார்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆரிஃப்பை கைது செய்தனர். எனினும், அவருக்கு வித்தியாசமான தண்டனை வழங்க நினைத்த போலீஸார், ஆரிஃப்பை காவல் நிலையத்தில் தோப்புக்கரணம் போட வைத்தனர். இதில், ஆரிஃப் தனது பேன்ட்டில் 4 முறை மூச்சா போய் விட்டாராம். பிறகு, சம்பவம் நடந்த இடத்துக்கு ஆரிஃப்பை அழைத்து வந்த போலீஸார், அந்த பெண் ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரிஃப் கைது செய்யப்பட்டு, சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்படும் தகவல் தெரிந்ததும் ஏராளமான செய்தியாளர்கள் கூடிவிட்டனர். அதிலிருந்த ஒரு பெண் நிருபர், ஆட்டோ டிரைவர் ஆரிஃப்பிடம், “என்ன ஆரிஃப், போலீஸ் உங்களை ஒன்றும் புடுங்க முடியாது என்று சொன்னீர்கள். தற்போது உங்களை பேன்ட்டிலேயே 4 முறை மூச்சா போக வைத்து விட்டார்களாமே, கேள்விப்பட்டேன். இனி போலீஸாரை பற்றி தரக்குறைவாக பேசுவீர்களா? பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வீர்களா?” என்று சீண்டியதுதான் ஹைலைட்.

தற்போது ஆரிஃப் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொள்ளும் வீடியோவும், ஆரிஃப் தோப்புக்கரணம் போடும் வீடியோவும், பெண் நிருபர் சீண்டும் வீடியோயும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it