பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டவருக்கு உயரிய விருதா.. பிரபல நடிகை கடும் எதிர்ப்பு..!

பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டவருக்கு உயரிய விருதா.. பிரபல நடிகை கடும் எதிர்ப்பு..!

Share it if you like it

Metoo விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருது வழங்குவதற்கு பிரபல கேரள நடிகை பார்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை இவ்வாறு கூறியுள்ளார்.

பக்கத்தில் “ஓ.என்.வி சார் நமது பெருமை. ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது. நம் கலாச்சாரத்தையும் வளர்த்தது. அவரது இலக்கிய பணியால் நம் இதயங்கள் பயனடைந்துள்ளன.

பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை” என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை அடுத்து கேரளாவை சேர்ந்த பல முன்னணி நடிகைகள் தங்கள் எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருவது வைரமுத்துவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Share it if you like it