ஊழல் வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுதலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகளில் விசாரணை மிக மோசமாக நடத்துப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பாக விளக்கமளித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றே இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.