ஹிந்தி… இங்கே போடா… அங்கே வாடா!

ஹிந்தி… இங்கே போடா… அங்கே வாடா!

Share it if you like it

தமிழ்நாட்டில் ஹிந்து தெரியாது போடா என்றும், இதே டெல்லியாக இருந்தால் ஹிந்து தெரியும் வாடா என்றும் சொல்வதும் தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகிப் போய் விட்டது.

தமிழக மக்கள் ஹிந்தி மொழியை கற்றக் கூடாது என்பதில் தி.மு.க. குறியாக இருக்கிறது. இதற்காகவே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றையும் நடத்தியது. ஆனால், தி.மு.க.வில் இருக்கும் மேல் மட்டத் தலைவர்களும் சரி, அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் ஹிந்து மொழியை கற்று வைத்திருப்பார்கள். இதனால், தமிழக மக்களில் பெரும் பகுதியினர் தி.மு.க.வை வெறுத்து வருகின்றனர். ஆனாலும், தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. தமிழகத்தில் ஹிந்தி மொழி எந்தவிதத்திலும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறது. தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க, தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கனிமொழி, சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஊழியர் ஹிந்தியில் பேசியதற்காக, தனக்கு ஹிந்தி தெரியாது என்று சொல்லி பெரும் பிரளயத்தையை உண்டு பண்ணியது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கியதும் நினைவிருக்கலாம். அதேசமயம், டெல்லிக்குச் சென்றால் மட்டும், அங்கிருக்கும் எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஹிந்தியில் பேசிவருகின்றனர். இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் வலம் வருகின்றனர் தி.மு.க.வினர். இப்படி வலம் வருபவர்களில் ஒருவர்தான் திருச்சி சிவா.

அதாவது, தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவாவும் ஒருவர். ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கியதில் இவரது பங்கும் உண்டு. ஆனால், டெல்லியில் இதர மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களிடம் ஹிந்தியில் பேசி இவர் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. குறிப்பாக, வெளி மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஓய்வு பெறும்போது, ஹிந்தியில் பாட்டுப் பாடி அவர்களை குஷிப்படுத்துவார். இப்படித்தான் கடந்தாண்டு ஓய்வுபெற்ற எம்.பி.க்களை ஹிந்தியில் பாடி குஷிப்படுத்தினார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்குக்கு பதிலாக தி.மு.க.வை வச்சு செய்தனர் நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும்.

இந்த நிலையில்தான், நிகழாண்டும் ஓய்வு பெற்ற எம்.பி.க்களை குஷிப்படுத்த ஹிந்தியில் பாட்டு பாடியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும் திருச்சி சிவாவை மீண்டும் விளாசி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஹிந்தி தெரியாது போடா என்றும் டெல்லிக்குச் சென்றால் ஹிந்தி தெரியும் வாடா என்றும் சொல்வதுமே தி.மு.க.வினருக்கு வேலையாகப் போய்விட்டது என்றும், தங்களின் சுய நலத்துக்காக தமிழக மக்களை ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டது தி.மு.க. என்றும் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share it if you like it