ஹிந்து தலித் பெண் கூட்டு பாலியல்: மதகுரு முகமது இஸ்லாம், சல்மான் கைது!

ஹிந்து தலித் பெண் கூட்டு பாலியல்: மதகுரு முகமது இஸ்லாம், சல்மான் கைது!

Share it if you like it

நேபாள எல்லைக்கு அருகே மஹராஜ்கஞ்சில் உள்ள மதரஸாவில் ஹிந்து தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மதகுரு முகமது இஸ்லாம், அவரது உறவினர் முகமது சல்மான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து பெண். இவர் மந்திரிப்பதற்காக அப்பகுதியிலுள்ள மதரஸாவுக்குச் சென்று வந்திருக்கிறார். அந்த மதரஸாவில் பணிபுரியும் மதகுரு முகமது இஸ்லாம் மாந்திரீக வேலைகளை செய்திருக்கிறார். இப்படி ஒருநாள் மந்திரிப்பதற்காக அப்பெண் சென்றிருக்கிறார். அப்போது மதகுரு முகமது இஸ்லாமும், அவரது உறவினர் முகமது சல்மானும் சேர்ந்து அப்பெண்ணை நேபாள எல்லையான மஹராஜ்கஞ்ச் பகுதியிலுள்ள மதரஸாவுக்கு கடத்திச் சென்றிருக்கிறார்கள். அங்கு அப்பெண்ணை மிரட்டி இருவரும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

பின்னர், இதை வெளியில் சொன்னால் மாந்திரீகம் செய்து குடும்பத்தையே நாசம் செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதனால் அப்பெண் பயந்து கொண்டு யாரிடமும் சொல்லவில்லை. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இருவரும் அடிக்கடி அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களது செயலால் வெறுப்படைந்த அப்பெண், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதகுரு முகமது இஸ்லாம், அவரது உறவினர் முகமது சல்மான் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it