நரிக்குறவர் குடும்பங்களுக்கு அயோத்தி அழைப்பிதழை வழங்கிய இந்து முன்னணி !

நரிக்குறவர் குடும்பங்களுக்கு அயோத்தி அழைப்பிதழை வழங்கிய இந்து முன்னணி !

Share it if you like it

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ் நரிக்குறவர் குடும்பங்களுக்கு இந்து முன்னணி அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே சிக்காரிமேடு எனும் இடத்தில் உள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை சந்தித்து, இந்துமுன்னணியின் தென் பாரத அமைப்பாளர் க.பக்தன் அவர்கள் ராம ஜென்ம பூமி அழைப்பிதழ்களை அந்த சமுதாயத்தின் தலைவர் திரு.ஜல்கேசன் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்துமுன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Share it if you like it