அப்பாவி மக்கள் உட்பட இரு பள்ளி ஆசிரியர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர தாக்குதல் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இதனை தொடர்ந்து ஜெய்ஷ்- இ-முகமது தளபதி ஷமிம் அகமது சோபி உள்பட 9 தீவிரவாதிகளை 6 நாட்களுக்குள் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.