மனைவியின் பிரசவத்தின் போது தனக்கு விடுமுறை வழங்கவில்லை என தென்காசி மாவட்டம் கடையம் காவல் ஆய்வாளர்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த விக்டோரியா கவுரி மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் எனவும் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.