மைனர் சிறுவனுடன் ‘ஹோமோ’: மதரஸா ஆசிரியர் கைது!

மைனர் சிறுவனுடன் ‘ஹோமோ’: மதரஸா ஆசிரியர் கைது!

Share it if you like it

ஹைதராபாத்தில் 14 வயது மைனர் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மதரஸா ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தோஷ் நகர் காவல் நிலையப் பகுதியில் இயங்கி வருகிறது அந்த மதரஸா. இங்கு 21 வயதான இஸ்லாமிய இளைஞர் மதரஸா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த மதரஸாவில் வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரியும் பெண்ணின் 14 வயது மகன் படித்து வருகிறார். தாய் உள்ளூரில் இல்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த மதரஸா பள்ளி ஆசிரியர், அந்த 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். கடந்த 2 மாதங்களாக இந்த பாலியல் டார்ச்சர் தொடர்ந்து வந்த நிலையில், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதால், தனக்கு நேர்ந்த கொடுமையை அச்சிறுவன் யாரிடமும் சொல்லவில்லை.

இந்த சூழலில், அதே மதரஸாவில் படிக்கும் இதர மாணவர்களை அச்சிறுவனுடன் பேசக் கூடாது என்று மதரஸா ஆசிரியர் கண்டித்திருக்கிறார். ஒருநாள் ஒரு மாணவர் அந்த மாணவருடன் பேசுவதைப் பார்த்த மதரஸா ஆசிரியர், அந்த மாணவரை மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன அச்சிறுவன், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து தனது அத்தையிடம் சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் அத்தை, உடனடியாக சந்தோஷ் நகர் காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதன் பேரில் சந்தோஷ் நகர் போலீஸார் விசாரணை நடத்தி, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மதரஸா ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த வாரம் இதேபோல கேரளாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மதரஸா ஆசிரியரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. நீலகிரியைச் சேர்ந்த இர்ஷாத் அலி என்பவர், பாலக்காடு அருகே திருமிற்றக்கோடு ஊராட்சியில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இங்கு பயிலச் சென்ற 14 வயது சிறுவனை, இர்ஷாத் அலி கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கு தெரியவரவே, போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில், இர்ஷாத் அலியை போலீஸார் கைது செய்தனர்.


Share it if you like it