தாலிபான்களுக்கு பயந்து தெறித்து ஓடும் உள்நாட்டு மக்கள் என்னை கொன்றாலும் கோவிலை விட்டு போக மாட்டேன் என்று கூறிய கடைசி ஹிந்து அர்ச்சகர்..!

தாலிபான்களுக்கு பயந்து தெறித்து ஓடும் உள்நாட்டு மக்கள் என்னை கொன்றாலும் கோவிலை விட்டு போக மாட்டேன் என்று கூறிய கடைசி ஹிந்து அர்ச்சகர்..!

Share it if you like it

அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறியதை அடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த பொதுமக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

தலிபான்களின் கொடுமையை நன்கு உணர்ந்த பெண்கள், பெண் குழந்தைகள், முதியவர்கள், என பலர் ஆப்கானை விட்டே வெறியேறும் அவல நிலை தற்பொழுது அங்கு நிலவுகிறது.

இந்நிலையில் காபூலில் உள்ள ரத்தன்நாத் கோயில் அர்ச்சகராக உள்ள ராஜேஷ் குமார் ஆப்கனை விட்டு வெளியேற போவதில்லை எனக்கூறியுள்ளார். தனது உயிரே போனாலும் அந்நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என இந்து அர்ச்சகர் ஒருவர் தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Image

https://nationworldnews.com/pandit-rajesh-the-last-priest-of-the-ratan-nath-temple-in-kabul-refused-to-leave-the-temple/

 


Share it if you like it