சட்ட விரோத பண பரிவர்த்தனை : சென்னையில் அமலாக்கத்துறை சோதனை !

சட்ட விரோத பண பரிவர்த்தனை : சென்னையில் அமலாக்கத்துறை சோதனை !

Share it if you like it

சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சில கட்டுமான நிறுவனங்களில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடப்பதாக அமலாக்கத்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னையில் ஆர்.ஏ.புரம், ஈ.சி.ஆர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததார் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். ரேசன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *