குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கான (சிஏஏ) ஒழுங்குமுறையை உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமை பெற அனுமதிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் CAA சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன.
பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட – துன்புறுத்தப்பட்ட முஸ்லிமல்லாத புலம்பெயர்ந்தோருக்கு CAA விதிகள் இந்திய குடியுரிமை வழங்குகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.