இந்தியாவில் ஜாதிய ஒழிக்க பாடுபட்டவர் ஈ.வே.ரா என்று தமிழ்நாட்டில் கம்பு சுத்த ஒரு கூட்டமே உள்ளது. அவர்தான் சமூக இந்தியாவில் ஜாதிய ஒழிக்க பாடுபட்டவர் என்று சமூக நீதியின் காவலர் என்று திமுக, திக இன்று வரை பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் அன்று ஈவேரா நடத்திய குடியரசு இதழில் அவர் தன்னை ராமசாமி நாயக்கர் என்றே தன்னுடைய பெயரை வெளியிட்டுள்ளார்.நாயக்கர் என்கிற அவர் ஜாதியை விடவில்லை .1926 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான குடியரசு இதழில் ஆசிரியர் ராமசாமி நாயக்கர் என வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன் பெயருக்கு பக்கத்தில் சாதி பெயரை போட்டுக்கொண்ட இவர்தான் தமிழ்நாட்டில் சாதியை ஒழித்தாரா என்று பெரியாரையும், திமுகவையும் விமர்சித்து இதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.