அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டொனால்டு லு. இவர், பிடிஐக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் ;
இந்த ஆண்டு ஜி-20 கூட்டத்துக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதுபோல ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் (ஏபிஇசி) கூட்டத்தை அமெரிக்கா நடத்துகிறது. ஜி-7 கூட்டத்தை ஜப்பான் நடத்துகிறது. குவாட் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை ஏற்றுள்ளன.
இது உலக நாடுகளுக்கு இடையில் மிகப்பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என டொனால்டு லு தெரிவித்துள்ளார்.