7 வருட ஆய்வுக்கு பின் இந்தியா அறிவிப்பு: சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம்  ஆண்டுகள் பழமையானதாம்!

7 வருட ஆய்வுக்கு பின் இந்தியா அறிவிப்பு: சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாம்!

Share it if you like it

பிலிப்பைன்ஸ் நாட்டு சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் சையத் சமீர் உசேன். இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், தனக்கு கிடைத்த திரிசூலத்தையும், வஜ்ராயுதத்தையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் உலக மக்களுக்கு காண்பித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் கூறும் போது இவ்வாறு கூறினார் :

நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில் அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.

அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். அந்த வகையில், கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன. இந்திய மக்கள் இதனை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களை சந்தித்து காட்டுகிறேன் என கூறியுள்ளார்.


Share it if you like it