எதிர்க்கட்சிகளின் கூட்டம் முடியல அதற்குள் வேட்டு வைத்த காங்கிரஸ் எம்.பி.!

எதிர்க்கட்சிகளின் கூட்டம் முடியல அதற்குள் வேட்டு வைத்த காங்கிரஸ் எம்.பி.!

Share it if you like it

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை திருடர்களின் கட்சி என காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை திருடர்களின் கட்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.யின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it