சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல்!

சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல்!

Share it if you like it

அமெரிக்க கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘மிட்ஜெட்’ எனப்படும் போர்க்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தது. இக்கப்பல் 19-ம் தேதி வரை இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா – அமெரிக்கா இடையே பரஸ்பரம் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், அமெரிக்க கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘மிட்ஜெட்’ எனப்படும் போர்க்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தது. அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல்களிலேயே இக்கப்பல்தான் மிகப்பெரியது. அதோடு, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கப்பல் இதுவாகும். அமெரிக்க கடலோர காவல்படையின் முக்கிய அங்கமாகத் திகழும் இந்த கப்பல், பல்வேறு சவாலான சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படக் கூடிய ஈடுபடும் திறன் கொண்டது. ஆளில்லாத வான்வழி வாகனங்களுக்கான தளத்தையும், மிக கடினமான கடல் சூழல்களில் செயல்படும் திறனையும் இக்கப்பல் கொண்டிருக்கிறது.

மேலும், இக்கப்பல் வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள், கணினி, நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன உபகரணங்களையும் கொண்டிருக்கிறது. 418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்ட இக்கப்பலுடன் 23 அதிகாரிகள், 120 மாலுமிகளும் வந்திருக்கிறார்கள். இக்கப்பலை சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் வரவேற்றார். இதுகுறித்த பேசிய ஜூடித் ரேவின், ‘இந்தோ பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக இந்தியா திகழ்கிறது. மிட்ஜெட்டின் சென்னை பயணம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டு செயல்பாடுகள், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ பசிபிக் பகுதிக்கான லட்சியத்தை நோக்கிய நமது உறவை மேலும் வலுவாக்கும் என நம்புகிறேன்’ என்றார்.


Share it if you like it