அயோத்தி சரயு புனித நீரை இலங்கைக்கு அனுப்பும் இந்தியா !

அயோத்தி சரயு புனித நீரை இலங்கைக்கு அனுப்பும் இந்தியா !

Share it if you like it

சீதா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட சீதா அம்மா கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கு சரயு நதியில் இருந்து புனித நீரை இலங்கைக்கு அனுப்பும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. கோயிலின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் இந்த விழா மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மதச் சடங்குகளுக்காகவும், கோவிலில் சீதா தேவியின் சிலை பிரதிஷ்டைக்காகவும் புனித சரயு நதி நீரை வலியுறுத்தி உத்தரப்பிரதேச அரசுக்கு இலங்கைப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, புனித நீரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்தது.

இந்நிலையில் அகண்ட பாரதத்தின் அங்கமான இலங்கையில் சீதா தேவி கோவில் கும்பாபிஷேகம் மே 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கும்பாபிசேக விழாவில் மதச் சடங்குகள் மற்றும் கோவிலில் சீதா தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக அயோத்தி சரயு நதி நீரை அனுப்ப கோரி, உத்தரப்பிரதேச அரசுக்கு இலங்கை கடிதம் எழுதியிருந்த நிலையில், உத்தரபிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி புனித நீரைக் கொண்டு செல்லும் பொறுப்பு இந்திய சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அயோத்தி தீர்த்த விகாஸ் பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஸ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் அறக்கட்டளை இந்த முயற்சியைப் பாராட்டியது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதிலும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை பாராட்டிய மஹந்த் சஷிகாந்த் தாஸ், இலங்கையில் உள்ள சீதை அம்மா கோயில் அனைத்து சனாதனிகளுக்கும் பெருமை சேர்க்கும் என்று கூறினார்.


Share it if you like it